காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

தில்லி காற்று மாசுபாடு: நீதிமன்ற அறிவுறுத்தலைப் பின்பற்றி ஆம் ஆத்மி அரசு ஆலோசனைக் கூட்டம்

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்துகிறது ஆம் ஆத்மி அரசு.

Published On :2 பிப்ரவரி 2024, 8:48 am IST

காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகள் எடுப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி அரசு புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. 

சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று (நவம்.7) வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்யும் வகையில் நடைபெற்ற அனைத்து துறைகளின் கூட்டத்திற்கு தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தலைமை தாங்கினார். போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் அதிஷி ஆகியோர் உடனிருந்தனர். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோபால் ராய், “தில்லியில் செயல்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தனது அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதுகுறித்து விவாதித்து நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்துகிறோம். நீதிமன்றம் அறிவுறுத்தியபடி செயல்படுவோம்” என்று தெரிவித்தார். 

முன்னதாக, தில்லி - என்.சி.ஆா். பகுதிகளில் அதிகரித்துள்ள காற்று மாசுபாடு தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பயிா்க் கழிவுகளை எரித்தல், வாகன மாசுபாடு மற்றும் திறந்த வெளியில் கழிவுகளை எரித்தல் போன்ற பிரச்னைகளுக்குத் தீா்வு காண உத்தரவிட்டது.

காற்றின் தரம் குறித்து செவ்வாயன்று மிகுந்த கவலை தெரிவித்ததுடன், பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய பங்காற்றுவதில் இதுவும் ஒன்று என்று கூறி விவசாயிகள் உடனடியாக கழிவுகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியது.

மேலும், முந்தைய உத்தரவின்படி நிறுவப்பட்ட ஸ்மோக் டவர்கள் வேலை செய்யவில்லை என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அவை சரிசெய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

மாசு பிரச்னை குறித்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரடியாகவோ அல்லது காணொளி மூலமாகவோ கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.