ஜம்மு - காஷ்மீர் எல்லையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடி, இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர்.
நாடுமுழுவதும் நாளை (நவ. 12) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கான பணிகள் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர். மேலும், சக வீரர்களுடன் இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.