மூன்று தேர்தல் பார்வையாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பணியில் இருந்த தேர்தல் பார்வையாளர்கள் மூன்று பேரை தவறான நடத்தை மற்றும் விதிமீறல் காரணமாக பணியிலிருந்து நீக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.
சத்தீஸ்கரின் தண்டேவாரா தொகுதியில் தேர்தல் பார்வையாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி லால்தீன்குமா ப்ராங்க்ளினை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக அனுராக் படேல் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் சியோனி மால்வா மற்றும் ஹோசங்காபாத் தொகுதியில் பொறுப்பில் இருந்த உதய நாராயண் தாஸ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கிரிஸ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மிசோரம் மாநிலத்தின் லங்லே மாவட்டத்தில் தேர்தல் செலவுப் பார்வையாளராக இருந்த ஐஆர்எஸ் அதிகாரி கௌரவ் அவஸ்தி அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தவறான நடத்தைகள் மற்றும் விதிமீறல் காரணமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: மாரடைப்பால் நடிகர் கங்கா மரணம்
40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 7-ஆம் நிறைவடைந்தது. அதே நாளன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், மத்திய பிரதேச வாக்குப்பதிவும் நவம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.
பதிவான வாக்குகள் டிசம்.3-ஆம் தேதி எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


