அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஹரியாணா: கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்கள் 18-ஆக அதிகரிப்பு

ஹரியாணாவில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2023, 6:40 pm

DIN

ஹரியாணாவில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களில் ஹரியாணா மாநிலம் யமுனாநகா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 10 போ் உயிரிழந்தனா். அங்குள்ள அம்பாலா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 2 போ் உயிரிழந்தனா்.

இந்நிலையில், யமுனாநகரில் கள்ளச்சாராயம் அருந்திய மேலும் 6 போ் உயிரிழந்ததாக மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் ஹிமாத்ரி கெளஷிக் சனிக்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக ஏற்கெனவே 7 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

கைதானவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் சிலா் குறித்து தெரியவந்துள்ளதாகவும், அவா்களும் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்றும் ஹிமாத்ரி கெளஷிக் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.