இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஸ்ரீநகர்: படகுகளில் தீ விபத்து: வங்கதேச சுற்றுலாப் பயணிகள் மூவர் பலி!

ஜம்மு - காஷ்மீரில் தால் ஏரி படகில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். 

News image
Updated On :11 நவம்பர் 2023, 12:48 pm

DIN


ஜம்மு - காஷ்மீரில் தால் ஏரி படகில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். 

ஜம்மு - காஷ்மீரின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான தால் ஏரியில் சுற்றுலா பயணிகள் சென்ற படகில் இன்று காலை (நவ. 11) தீ விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்த படகுகளுக்கு தீ பரவியதில் 5 படகுகள் முற்றிலும் சாம்பலாகின. சில படகுகள் கடும் சேதமடைந்தன. 

இதில் சஃபீனா என்ற படகில் தங்கியிருந்த பயணிகள், வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பயணிகள் உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.