ஜெய்ப்பூர்: ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ண பலராம பசு சேவை அறக்கட்டளை, பசுஞ்சாணத்தைப் பயன்படுத்தி 3 லட்சம் தீப விளக்குகளை உருவாக்கியுள்ளது.
ராஜஸ்தான் ஹிங்கோனியா கோசாலைகளில் இருந்து பசுங்சாணம் வரவைக்கைப்பட்டுள்ளது. அரசால் நெறிமுறைப்படுத்தப்பட்ட இந்த கோசாலையில் 13 ஆயிரம் மாடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் பேசும்போது, “நாங்கள் பசுஞ்சாணத்தில் இருந்து 3 லட்சம் விளக்குகளைத் தயாரித்துள்ளோம். தன்னார்வலர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பசு பாதுகாப்புக்கான செய்தியை இது முன்னெடுத்து செல்லும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: தீபாவளி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து
மாவு, மரத்தூள் மற்றும் பசை இவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற்கென ஹைட்ராலிக் இயந்திரங்கள் பயன்படுத்தி விளக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த விளக்குகள் இயக்கத்தில் பின்தொடர்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை சந்தையில் உரிய விலையில் விற்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கிறார்கள்.