ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 5 பேரை பாதுகாப்புப் படையினா் இன்று(வெள்ளிக்கிழமை) சுட்டுக் கொன்றனா்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருந்ததாகத் தகவல் வெளியானதையடுத்து பாதுகாப்புப் படைகள் இன்று(வெள்ளிக்கிழமை) காலை ரோந்து பணியில் ஈடுபட்டன.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு என்ன பிரச்னை? - மருத்துவர்கள் தகவல்
இந்த மோதலில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
குல்காம் காவல்துறை, ராணுவம் மற்றும் பாதுகாப்புப்படையினரால் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவா்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் என்று மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.