47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 கோடி ஊழல்: அமித் ஷா குற்றச்சாட்டு!

ராஜஸ்தானில் நவ. 25ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

News image
Updated On :17 நவம்பர் 2023, 12:04 pm

DIN

ராஜஸ்தானில் ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். 

ராஜஸ்தானில் நவ. 25ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ராஜஸ்தானில் தீவிர பிரசாரங்களில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், ராஜஸ்தானில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, சிந்து நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காளிசிந்த் அணையின் பேரில் ரூ.250 கோடி உழல் நடந்துள்ளது. இதற்கு முன்பு ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 கோடி வரை ஊழல் நடந்துத்துள்ளது. 

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை மட்டுமே நம்பியுள்ள மக்களுக்கு கூட காங்கிரஸ் கட்சி எதையும் செய்யவில்லை. முழு ராஜஸ்தானையும் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம்-ஆக மாற்றி வைத்துள்ளனர் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.