தில்லியில் காற்றின் திசை மாறுபட்டால் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓரிரு வாரங்களாக தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல நாள்களாக காற்றின் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு மேல் சென்று 'கடுமை' பிரிவில் நீடித்து வந்தது.
இந்நிலையில் இன்று காற்றின் தரம் 400க்கு கீழ் குறைந்து 'மிகவும் மோசம்' (very poor) பிரிவுக்குச் சென்றுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது:
தில்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தீபாவளி பண்டிகையின்போது காற்றின் தரம் 'கடுமை' பிரிவில் இருந்து வந்தது. தற்போது காற்றின் திசை மாறியுள்ளது. இதனால் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளது. காற்றின் தரக் குறியீடு 335 ஆக உள்ளது. மேலும் சில நேர்மறையான விஷயங்களை எதிர்பார்க்கிறோம். நிலைமை சீக்கிரம் சரியானால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். அடுத்த 2-3 நாள்களில் அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பது மேலும் குறையும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


