சத்யேந்தர் ஜெயினுக்கு டிச.4 வரை இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு!

தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 
சத்யேந்தர் ஜெயின்
சத்யேந்தர் ஜெயின்
Published on
Updated on
1 min read

தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

தில்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மத்த தலைவருமான சத்யேந்தர் ஜெயின் பணமோசடி வழக்கு தொடர்பாக கடந்தாண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில், இடைக்கால ஜாமீன் முடிவடைந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா இன்று ஆஜராகாததால் நீதிபதி பேலா எம்.திரிவேதி அமர்வு இந்த வழக்கை டிசம்பர் 4-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com