

காங்கிரஸ் அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், ஊழலில் ஈடுபடுவதாகவும் ராஜஸ்தான் பாஜக தலைவர் சிபி ஜோஷி குற்றம் சாட்டினார்.
சித்தோர்கரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை மறந்துவிட்டது. ஊழலை மட்டுமே செய்தது மக்களை ஏமாற்றியது.
பிரதமர் நரேந்திர மோடி சொல்வதைச் செய்வதால் மக்கள் அவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்துள்ளனர்.
பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைக்கும் என்று ஜோஷி நம்பிக்கை தெரிவித்தார்.
ராஜஸ்தானில் இன்று 199 தொகுதிகளுக்கு இன்று காலை முதல் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.