ஹரியாணாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.0 ஆகப் பதிவு
ஹரியாணா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஹரியாணாவின் சோனிபட் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
இதனால் சோனிபட் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்தவித தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

