தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், சித்திப்பேட்டை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
முதல்வா் சந்திரசேகா் ராவின் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆளும் தெலங்கானாவில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நக்ஸல் பாதிப்பு மிகுந்த 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தெலங்கானாவில் பிஆா்எஸ், காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
மொத்தமாக 119 தொகுதிகளில் 2,290 வாக்காளா்கள் போட்டியிடுகின்றனர். 3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
இன்று காலை 11 மணி நிலவரப்படி, 20.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று பிற்பகல், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், சித்திப்பேட்டை தொகுதியில் சிந்தமடகா வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அவரது மனைவி ஷோபாவும் அவருடன் வந்து வாக்களித்தார்.