கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பதியில் கடத்தப்பட்ட குழந்தை 10 மணி நேரத்தில் மீட்பு

திருமலை திருப்பதியில், சென்னையைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தை கடத்தப்பட்ட நிலையில், தனிப்படையினர் குழந்தையை மீட்டுள்ளனர்.

News image
Updated On :3 அக்டோபர் 2023, 9:10 am

DIN


திருமலை: திருமலை திருப்பதியில், சென்னையைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தை கடத்தப்பட்ட நிலையில், தனிப்படையினர் குழந்தையை மீட்டுள்ளனர்.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றுவிட்டு பேருந்துநிலையத்தில் காத்திருந்தபோது கடத்தப்பட்ட குழந்தை 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தனது மனைவி மீனா மற்றும் குழந்தை அருள்முருகனுடன் திருப்பதி சென்றிருந்தார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு, சென்னை திரும்ப திருப்பதி பேருந்த நிலையத்துக்கு வந்த போது குழந்தை கடத்தப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் பேருந்துநிலையத்தில் மூவரும் தூங்கிக் கொணடிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளார்.

சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து குழந்தையை தேடி வந்த காவல்துறையினர், 10 மணி நேரத்தில் குழந்தையை மீட்டுள்ளனர். பேருந்து நிலையத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து சுதாகர் என்பவரிடமிருந்து குழந்தையை காவல்துறையினர் மீட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.