ரூ.2,000 நோட்டுகள்.. இன்றுடன் நிறைவடையும் கால அவகாசம்!

புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள அல்லது வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிகிறது.
ரூ.2,000 நோட்டுகள்.. இன்றுடன் நிறைவடையும் கால அவகாசம்!

புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள அல்லது வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிகிறது.

மூன்று மாத காலத்துக்கும் மேல் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டும், இன்னமும் 12 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படவில்லை என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.

வங்கிகள் மூலம் ரூ.3.43 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் அதாவது 96 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மீதம் ரூ.12,000 கோடி மதிப்பிலான நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை எனவும் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை 14 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் திரும்ப வராமல் இருந்த நிலையில், ஒரே வாரத்தில் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்ப வந்துள்ளன. 

புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கடந்த மே மாதத்தில் அறிவித்தது. மக்கள், தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ள கடந்த 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் சனிக்கிழமை (அக். 7) வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பையில் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்கள் சந்திப்பில் ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட மே 19-ஆம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் இருந்த ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளில் ரூ.3.42 லட்சம் கோடி நோட்டுகள் கடந்த செப்டம்பா் 29-ம் தேதி வரை திரும்பப் பெற்றப்பட்டன.

நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி, தற்போதுவரை திரும்பப் பெறப்பட்ட ரூ.3.43 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளில் 87 சதவீதம் வங்கிக் கணக்குகளில் வைப்பு வைக்கப்பட்டது. மற்றவை வங்கிகளில் பணமாக மாற்றிக் கொள்ளப்பட்டது. ரூ.12,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை.

அவகாசம் முடிவடைந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 8) முதல் ரிசா்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ரூ.2000 நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ளலாம். ரிசா்வ் வங்கிக்கு செல்ல இயலாதவா்கள், அஞ்சல் துறையின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com