நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

எந்தவொரு விவகாரத்திலும் வன்முறை சரியான தீர்வை வழங்காது: காங்கிரஸ் கண்டனம்

இஸ்ரேல் மக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எந்தவொரு விவகாரத்திலும் வன்முறை சரியான தீர்வை வழங்காது, அது நிறுத்தப்பட வேண்டும் என்ற

News image
Updated On :18 அக்டோபர் 2023, 11:35 am IST

புது தில்லி: இஸ்ரேல் மக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எந்தவொரு விவகாரத்திலும் வன்முறை சரியான தீர்வை வழங்காது, அது நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஆளும் ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது சனிக்கிழமை காலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில், 350-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா். 1,900-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 1,600-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்தாா். இரு தரப்பிலிருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 

காங்கிரஸ் கண்டனம்
இஸ்ரேல் மீது நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், வன்முறை ஒருபோதும் வெல்லாது. எந்தவொரு விவகாரத்திலும் வன்முறை சரியான தீர்வை வழங்காது, அது நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பாலஸ்தீன மக்களின் சுயமரியாதை, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான நியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றப்பட வேண்டும், அதேசமயம் இஸ்ரேஸ் மக்களின் நியாயமான தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதி செய்ய வேண்டும்.

"வன்முறை ஒருபோதும் வெல்லாது. எந்தவொரு விவகாரத்திலும் வன்முறை சரியான தீர்வை வழங்காது, அது நிறுத்தப்பட வேண்டும்" என்று  ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.