3 வழக்குகளில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதன்படி அமராவதியில் உள்வட்ட சாலை, ஃபைபர் நெட், அங்கல்லூ கலவர வழக்குகளில் அவரின் முன்ஜாமீன் மனுக்களை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக் காவலை வரும் 19-ஆம் தேதி வரை நீட்டித்து, அம்மாநில ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில், மாநில குற்றத் தடுப்புப் பிரிவு (சிஐடி) போலீஸாரால் கடந்த மாதம் 9-ஆம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டாா்.
இதையடுத்து, ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அவா் அடைக்கப்பட்டாா். அவரது நீதிமன்றக் காவல் ஏற்கெனவே இருமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக வரும் 19-ஆம் தேதி வரை நீட்டித்து, அமராவதியில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
முன்னதாக, கடந்த மாதம் 23, 24-ஆம் தேதிகளில் அவரை காவலில் எடுத்து சிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.