தெலங்கானா மாநில முதலமைச்சரும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தெலங்கானா பொருளாதாரம் பாதிப்பு அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 30-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு நேற்று (அக்டோபர் 20) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், “தேர்தலில் 95 முதல் 105 இடங்கள் வெற்றிபெறுவோம், காஜ்வெல் தொகுதி மக்கள் தன் மீது பேரன்பு வைத்துள்ளனர்” என்று கூறினார்.
இதையும் படிக்க: ராணுவத்தை தரம்தாழ்த்தும் பாஜக: காங்கிரஸ் கண்டனம்
தொடர்ந்து பேசிய அவர், “பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கரோனா நோய்த் தொற்று ஆகியவை காரணமாக தெலங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இளம் மாநிலமான தெலங்கானா கடுமையான உழைப்பின் மூலம் பெரும் வளர்ச்சியை எட்டும்.
மேலும், தற்போது எட்டியுள்ள வளர்ச்சியால் நாம் திருப்தி அடைந்து விடக்கூடாது. வளர்ச்சியை நோக்கி செல்வது என்பது தொடர் செயல்முறையாகும் என்று தெரிவித்தார்.
2014-ஆம் ஆண்டு முதல் சந்திரசேகர ராவ் தெலங்கானாவின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது பி.ஆர்.எஸ். கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

பிளே ஆஃப்ஸ் போட்டிகளில் சொதப்பும் விராட் கோலி..! முற்றுப்புள்ளி வைப்பாரா?

ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



