பாலஸ்தீனத்துக்கு ஆதரவானது காந்தியின் நிலைப்பாடு: ஓவைசி

இந்தியாவின் தந்தையான காந்தியின் நிலைப்பாடு பாலஸ்தீனத்துக்கு ஆதரவானதாகவே இருந்ததாக மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். 
பாலஸ்தீனத்துக்கு ஆதரவானது காந்தியின் நிலைப்பாடு: ஓவைசி
Published on
Updated on
1 min read

இந்தியாவின் தந்தையான காந்தியின் நிலைப்பாடு பாலஸ்தீனத்துக்கு ஆதரவானதாகவே இருந்ததாக மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். 

பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையிலான போர் தொடர்பாக பேசிய ஓவைசி, இந்திய மக்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்கானதோ, பிரான்ஸு எப்படி பிரெஞ்சுக்காரர்களுக்கானதோ அதேபோன்றுதான் பாலஸ்தீனம் அரேபியர்களுக்கானது எனக் குறிப்பிட்டார். போரிலிருந்து விடுபட்டு பாலஸ்தீன மக்கள் அமைதியான சுதந்திரம் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் - இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான போர் 15வது நாளான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற போரில் இஸ்ரேல் தாக்குதலால் 3,478 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 12,065 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 

இதேபோன்று ஹமாஸ் படையினரின் தாக்குதலால், இஸ்ரேலில் 1,400 பேர் பலியானதாகவும், 3,800க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com