அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஷீரடி விமான நிலைய புதிய முனையம்: ரூ.1,200 கோடி ஒப்புதல்!

ஷீரடி விமான நிலைய மற்றொரு முனையத்தின் நிலுவையில் உள்ள பணிகளை மேற்கொள்ள மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.1,200 கோடியை ஒதுக்கீடு செய்த தீர்மானத்தை மகாராஷ்டிர அரசு சனிக்கிழமை வெளியிட்டது.

News image
Updated On :22 அக்டோபர் 2023, 5:56 am

DIN

ஷீரடி விமான நிலைய மற்றொரு முனையத்தின் நிலுவையில் உள்ள பணிகளை மேற்கொள்ள மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.1,200 கோடியை ஒதுக்கீடு செய்த தீர்மானத்தை மகாராஷ்டிர அரசு சனிக்கிழமை வெளியிட்டது.

முந்தைய பணிகளுக்காக ரூ.364 கோடியும், மற்றொரு முனையத்தின் மேம்பாட்டு பணிகள் மற்றும் ஷீரடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.876 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மாநில தலைமைச் செயலாளர் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்திற்கு முதல்வர் மற்றும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஷீரடி விமான நிலையமானது தில்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் திருப்பதி போன்ற அனைத்து முக்கிய நகரங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்துக்கு ஒவ்வொரு மாதமும் 64,000 பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பயணிகள் பெரும்பாலானவர்கள் சாய்பாபா பக்தர்கள் ஆவர். மேலும், இந்த விமான நிலையத்தில்  விவசாய மற்றும் ஏனைய பொருள்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் நடைபெறுகிறது.

விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளை அழகுபடுத்துதல், நுழைவு வாயில் அமைத்தல், ஓடுபாதை புனரமைப்பு, விமான நிலையத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் மற்றும் பயிற்சி மையம் தவிர, பாதுகாப்புப் பணியாளர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு இந்த தொகை செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போது விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 300 பயணிகளை மட்டுமே நிர்வகிக்க முடிகிறது. மற்றொரு புதிய முனையத்தை உருவாக்கிய பிறகு, ஒரு மணி நேரத்திற்கு 1,200 பயணிகளை நிர்வகிக்க முடியும். பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால், கூடுதல் பயணிகள் முனையம் அமைக்க வேண்டும். மேலும், குடிநீர் பானங்கள் மற்றும் உணவுக் கடைகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம்,” என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதிய முனையம் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும். இதில் அனைத்து நவீன வசதிகளும் இருக்கும். தரைதளத்தில் சோதனை கூடம், பயணிகள் சோதனை பகுதி, தொலைதூரத்தில் இருந்து கண்காணிக்கும்  வசதி மற்றும் பொருள்களை கையாளும் அமைப்பு போன்ற வசதிகள் அமைக்கப்படும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.