புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

5 கிலோ கோகைன் போதைப் பொருளுடன் வந்த பயணி கைது!

ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருளை கடத்த முயன்ற ஆண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் இன்று தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2023, 11:29 am

DIN

ஹைதராபாத்: ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருளை கடத்த முயன்ற ஆண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி விமான நிலையத்தில் பயணியிடமிருந்து போதை மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் சட்டம் 1985 இன் கீழ் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான கோகோயினை பறிமுதல் செய்தனர்.

பழுப்பு நிற டேப்பில் சுற்றப்பட்ட இந்த போதைப் பொருள், சூட்கேஸின் அடிப்பகுதியிலும், பெண்களின் கைப்பைகளின் அடிப்பகுதியிலும் சாமர்த்தியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டவர் லாவோஸில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஹைதராபாத்துக்கு சென்று விட்டு தில்லிக்கு சென்று கொண்டிருந்தார்.

சர்வதேச சந்தையில் ரூ.50 கோடி மதிப்புள்ள இந்த 5 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டதோடு பயணியும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.