பிகாரின் சரண் மற்றும் ரோஹ்தாஸ் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் பாய்ந்ததில் 7 பேர் பலியாகினர்.
பெல்டி காவல் நிலையத்திற்குள்பட்ட ரஜ்ஜுபூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக் ராய் அவரது 12 வயது மகன் ஆதித்ய குமார் மற்றும் மருமகன் ரோஹித் குமார்(17)ஆகியோர் மின்னல் பாய்ந்து பலியானர்.
மேலும், வயலில் உரங்களைத் துவிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில், அசோக் ராய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன், மருமகனும் சிகிச்சைக்காக சரண் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையடுத்து, ரோஹ்தாஸில் தாரி கிராமத்தில் சபீனா கதூன், கபுதரா தேவி இரு சகோதரிகளும் உயிரிழந்தனர்.