

புதுதில்லி: தில்லி விமான நிலையத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு விமானம் புறப்படவிருந்ததாகவும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிரதமர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ட்ரூடோ வெள்ளிக்கிழமை தேசிய தலைநகர் புதுதில்லிக்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.