இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ், சந்திரபாபு ரத்தத்திலேயே ஊழல் என்பது இல்லை. நாட்டில் அனைவராலும் மதிக்கப்படக்கூடியவர் சந்திரபாபு நாயுடு. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்நோக்கத்துடன் சந்திரபாபுவை சிறையில் அடைத்துள்ளார். அனைத்து கட்சித் தலைவர்களும் எனக்குத் தொடர்புகொண்டு அவர்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஜெகன்மோகன் எதிர்கொள்ள வேண்டிய உண்மையான வழக்கு என்ன தெரியுமா? விவேக் ஆனந்த் கொலை விவகாரத்தில் காவல் துறையிலிருந்து கடப்பா எம்.பி. அவினாஷ் உங்களைக் காப்பாற்றிவிட்டார் எனக் குறிப்பிட்டார்.