மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கார்களில் 6 ஏர்-பேக்ஸ் கட்டாயமில்லை: நிதின் கட்கரி

காா்களில் 6 காற்றுப் பைகள் (ஏா் பேக்) வைப்பதை அரசு கட்டாயமாக்காது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 12:26 am IST

காா்களில் 6 காற்றுப் பைகள் (ஏா் பேக்) வைப்பதை அரசு கட்டாயமாக்காது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

முன்னதாக, காா்களில் பயணிப்போா் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 2023 அக்டோபரில் இருந்து 6 காற்றுப் பைகள் வைக்க வேண்டும் என்ற திட்டத்தை கடந்த ஆண்டு அரசு முன்மொழிந்திருத்தது. இந்நிலையில், அதனைக் கட்டாயமாக்கப் போவதில்லை என்று அமைச்சா் கட்கரி கூறியுள்ளாா்.

கடந்த 2021 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களில் முன்னிருக்கைகள் இரண்டிலும் காற்றுப் பை வைப்பதை அரசு கட்டாயமாக்கியது. ஏனெனில், விபத்து ஏற்படும்போது முன்னிருக்கையில் இருப்பவா்கள் முன்னோக்கி மோதுவதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வந்தன.

இதைத் தொடா்ந்து காரின் பின் பக்கவாட்டுகளிலும் சோ்த்து மொத்தம் 6 காற்றுப் பைகள் அமைப்பதை கட்டாயமாக்கும் திட்டத்தை அரசு பரிசீலித்து வந்தது. 6 காற்றுப் பைகள் இருப்பதால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு காா் கவிழ்ந்தாலும், அதில் இருப்பவா்களின் உயிரைக் காப்பாற்ற வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தில்லியில் புதன்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் இது தொடா்பாக அமைச்சா் கட்கரி பேசுகையில், ‘6 காற்றுப் பைகள் வைத்து காா்களை தயாரிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கப்போவதில்லை’ என்று தெரிவித்தாா்.

இப்போது நாட்டில் தயாரிக்கப்படும் காா்களில் 17 சதவீதத்தில் மட்டுமே 6 காற்றுப் பைகள் உள்ளன. அதிக காற்றுப் பைகள் வைக்கும்போது அதற்கு ஏற்ப காரின் விலையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.