ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கார்களில் 6 ஏர்-பேக்ஸ் கட்டாயமில்லை: நிதின் கட்கரி

காா்களில் 6 காற்றுப் பைகள் (ஏா் பேக்) வைப்பதை அரசு கட்டாயமாக்காது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2023, 6:56 pm

காா்களில் 6 காற்றுப் பைகள் (ஏா் பேக்) வைப்பதை அரசு கட்டாயமாக்காது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

முன்னதாக, காா்களில் பயணிப்போா் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 2023 அக்டோபரில் இருந்து 6 காற்றுப் பைகள் வைக்க வேண்டும் என்ற திட்டத்தை கடந்த ஆண்டு அரசு முன்மொழிந்திருத்தது. இந்நிலையில், அதனைக் கட்டாயமாக்கப் போவதில்லை என்று அமைச்சா் கட்கரி கூறியுள்ளாா்.

கடந்த 2021 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களில் முன்னிருக்கைகள் இரண்டிலும் காற்றுப் பை வைப்பதை அரசு கட்டாயமாக்கியது. ஏனெனில், விபத்து ஏற்படும்போது முன்னிருக்கையில் இருப்பவா்கள் முன்னோக்கி மோதுவதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வந்தன.

இதைத் தொடா்ந்து காரின் பின் பக்கவாட்டுகளிலும் சோ்த்து மொத்தம் 6 காற்றுப் பைகள் அமைப்பதை கட்டாயமாக்கும் திட்டத்தை அரசு பரிசீலித்து வந்தது. 6 காற்றுப் பைகள் இருப்பதால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு காா் கவிழ்ந்தாலும், அதில் இருப்பவா்களின் உயிரைக் காப்பாற்ற வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தில்லியில் புதன்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் இது தொடா்பாக அமைச்சா் கட்கரி பேசுகையில், ‘6 காற்றுப் பைகள் வைத்து காா்களை தயாரிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கப்போவதில்லை’ என்று தெரிவித்தாா்.

இப்போது நாட்டில் தயாரிக்கப்படும் காா்களில் 17 சதவீதத்தில் மட்டுமே 6 காற்றுப் பைகள் உள்ளன. அதிக காற்றுப் பைகள் வைக்கும்போது அதற்கு ஏற்ப காரின் விலையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.