உத்தரப் பிரதேசத்தின், கிரேட்டர் நொய்டாவில் கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் மின்தூக்கி அறுந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள அம்ரபாலி கட்டடம் கட்டுமானதளத்தில் மின்தூக்கி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடைபெறும் சமயத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாகினர், மேலும் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைபெறும் மருத்துவமனையில் ஒரு போலீஸார் குழுவும், விபத்து நடந்த இடத்தில் மற்றொரு குழுவும் விசாரணை நடத்தி வருகின்றது.