மதுராவில் ராதா அஷ்டமி கொண்டாட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி!

மதுராவின் பர்சனா பகுதியில் ராதா அஷ்டமி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். 
மதுராவில் ராதா அஷ்டமி கொண்டாட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி!
Published on
Updated on
1 min read

மதுராவின் பர்சனா பகுதியில் ராதா அஷ்டமி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். 

மதுராவில் ராதா அஷ்டமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு முதலே கோயிலில் கூட்டம் கூட தொடங்கிவிட்டனர். இதனால் பக்தர்கள் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 

சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். அதில் 65 வயது மூதாட்டி உடல்நிலை மோசமடைந்ததையடுத்து பர்சானா சமூக சுகாதார மையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 

மூதாட்டி ஏற்கனவே நீரிழிவு நோயால் அவதிப்பட்டுவந்த நிலையில், சர்க்கரையின் அளவு அதிகரித்ததால் அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இருப்பினும், கூட்டநெரிசல் காரணமாகவே மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். 

மற்றொரு மூதாட்டி கோயிலின் அருகே இறந்துகிடந்ததாக அவர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

மேலும், ஹரியாணாவைச் சேர்ந்த சுரேந்திரா, மஞ்சு மற்றும் மிர்சாபூரைச் சேர்ந்த மற்றொரு பெண் ராதா அஷ்டமி கொண்டாட்டத்தின் போது பக்தர்கள் கூடியிருந்த கோயிலின் படிக்கட்டில் மயங்கி விழுந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com