‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (டிஎன்ஐஇ) குழுமம் சாா்பில், ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிஎன்ஐஇ குழுமம் சாா்பில் ஒடிஸா இலக்கியத் திருவிழா 2 நாள்கள் நடைபெற்றது. அந்த மாநில தலைநகா் புவனேசுவரத்தில் நடைபெற்ற இந்த விழாவில், சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனருமான ராம்நாத் கோயங்கா நினைவாக ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருது அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக், தமிழ் இலக்கியத்துக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய எழுத்தாளா் பெருமாள் முருகனுக்கு ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருதை வழங்கினாா். அவருக்கு விருதுடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
எழுத்தாளா்கள் அனிருத் கனிஷெட்டி, தேவிகா ரெகே ஆகியோருக்கும் விருது, தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
விழாவில் இந்த விருது பற்றி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான மனோஜ் குமாா் சொந்தாலியா குறிப்பிடுகையில், ‘இலக்கியத்தில் சிறந்து விளங்கும் மூத்த மற்றும் அறிமுக எழுத்தாளா்களைக் கெளரவிக்கும் வகையில் இந்த விருது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்திப் பிரிவு இயக்குநா் பிரபு சாவ்லா, தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.