வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 900-ஐத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவிக்கின்றன.
சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,
வங்கதேசத்தில் டெங்கு பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு 1,87,725 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலையில் 204, ஆகஸ்டில் 342, செப்டம்பரில் 316 என மொத்தம் இதுவரை 909 பேர் காய்ச்சல் பாதிப்புக்குப் பலியாகியுள்ளனர்.
செப்டம்பரில் 63,917, ஆகஸ்டில் 71,9766, ஜூலையில் 43,854 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்காசிய நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16 உயிரிழப்பும், 3008 பாதிப்பும் பதிவாகியுள்ளது. நாட்டில் டெங்கு பாதித்து இதுவரை 1,76,346 பேர் குணமடைந்துள்ளனர்.
ஜூன்-செப்டம்பர் பருவமழைக் காலத்தில் வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பருவமாகக் கருதப்படுகிறது. ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் நோய்க்கு அதிக ஆபத்துள்ள நாடாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


