பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

டெங்கு காய்ச்சல் அதிகம் பாதிக்கக்கூடிய நாட்டில் இதுவரை 909 பேர் பலி!

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 900-ஐத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவிக்கின்றன.

News image
Updated On :25 செப்டம்பர் 2023, 12:40 pm

DIN

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 900-ஐத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவிக்கின்றன.

சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், 

வங்கதேசத்தில் டெங்கு பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு 1,87,725 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலையில் 204, ஆகஸ்டில் 342, செப்டம்பரில் 316 என மொத்தம் இதுவரை 909 பேர் காய்ச்சல் பாதிப்புக்குப் பலியாகியுள்ளனர். 

செப்டம்பரில் 63,917, ஆகஸ்டில் 71,9766, ஜூலையில் 43,854 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்காசிய நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16 உயிரிழப்பும், 3008 பாதிப்பும் பதிவாகியுள்ளது. நாட்டில் டெங்கு பாதித்து இதுவரை 1,76,346 பேர் குணமடைந்துள்ளனர். 

ஜூன்-செப்டம்பர் பருவமழைக் காலத்தில் வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பருவமாகக் கருதப்படுகிறது. ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் நோய்க்கு அதிக ஆபத்துள்ள நாடாகக் கருதப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.