விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிகாரில் ஒரேநாளில் 12 பேர் நீரில் மூழ்கி பலி!

பிகாரில் உள்ள 6 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

News image
கேரளத்தில் நெருங்கிய உறவினர் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு நேரிட்ட கதி
Updated On :26 செப்டம்பர் 2023, 6:50 am

DIN

பிகாரில் உள்ள 6 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

கயா மற்றும் அர்வால் மாவட்டங்களில் தலா மூன்று பேரும், தர்பங்காவில் இருவர், அவுரங்காபாத், சமஸ்திபூர், சுபால் மற்றும் ஜமுய் மாவட்டத்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். 

கயாவில் 2 சிறுமிகள் சங்கம் குமாரி(13), ரதிம் குமாரி (10) ஆகிய இருவரும் படவுரா கிராமத்தில் அமைந்துள்ள கால்வாயில் மூழ்கி இறந்தனர். 

சிறுமிகள் கால்வாய் அருகே விறகு கொண்டுவர சென்றதாக கிராம மக்கள் கூறினர். நீரில் மூழ்கிய சிறுமிகளை காப்பற்ற முயன்ற ரஹிம் கால்வாயில் தவறி விழுந்தார். அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட கிராம மக்கள், கால்வாயில் குதித்து மூன்று சிறுமிகளைக் காப்பாற்றினர். அதற்குள் சங்கமும், ரஹிமும் உயிரிழந்தனர். 

அர்வாலில் இரண்டு மைனர் இரட்டை சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 
மேலும், ஒருவர் சோனே ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.