47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமையும்: முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே

பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :29 செப்டம்பர் 2023, 1:44 pm

DIN

பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார். 
ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தில் நடைபெற்ற பாதயாத்திரை நிறைவு விழாவில் இன்று பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் பாரதிய ஜனதா (பாஜக) ஆட்சி அமையப் போகிறது என்றும், மீண்டும் வளர்ச்சி ஏற்படும் என்றும் அவர் கூறினார். 
மேலும் நிறுத்தப்பட்ட திட்டங்களும் தொடங்கப்படும் என்று வசுந்தரா ராஜே உறுதியளித்தார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலப் பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைகிறது. 
இதையடுத்து இந்த 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கு தற்போதே தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.