ராகுல் காந்தியை சன்சத் டிவி முழுமையாக திரையில் காட்டவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று(புதன்கிழமை) பிற்பகல் உரையாற்றினார்.
அப்போது மணிப்பூர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக சாட்டினார்.
இந்நிலையில் ராகுல் காந்தி மக்களவையில் பேசியபோது மத்திய அரசின் தொலைக்காட்சியான சன்சத் டிவியில் அவரை முழுமையாக திரையில் காட்டவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
'மக்களவையில் ராகுல் காந்தி இன்று பிற்பகல் 12.09 முதல் 12.46 மணி வரை 37 நிமிடங்கள் பேசினார். ஆனால், சன்சத் டிவி கேமரா, வெறும் 14 நிமிடங்கள் 37 நொடிகள் மட்டுமே அவரை திரையில் காட்டியது. அவர் பேசியதில் இது 40%க்கும் குறைவான நேரம்.
மணிப்பூர் குறித்து 15 நிமிடம் 42 நொடிகள் ராகுல் காந்தி பேசிய நிலையில், அவைத் தலைவர் ஓம் பிர்லா 11 நிமிடங்கள் 8 நொடிகள் திரையில் காட்டப்பட்டுள்ளார். இது 71% நேரம்.
எதைப் பார்த்து பிரதமர் மோடி அரசு பயப்படுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.
In his first speech after coming back from the unjustified disqualification, @RahulGandhi spoke from 12:09pm to 12:46pm i.e. 37 minutes during the No-Confidence Motion.
â Jairam Ramesh (@Jairam_Ramesh) August 9, 2023
Out of which the Sansad TV camera showed him for ONLY 14 mins 37 seconds. Thatâs less than 40% screen time!⦠pic.twitter.com/r8AHVHdNGv
இதையும் படிக்க | ராகுல் உரையின்போது மக்களவையில் பிரதமர் இல்லை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

35 கோடி பார்வைகளைக் கடந்த ராமாயணா டிரைலர்!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 2 - நேரலை!

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியர்கள்!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர்க் கண்காட்சி தொடக்கம்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



