ராகுல் காந்தியை சன்சத் டிவி முழுமையாக திரையில் காட்டவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று(புதன்கிழமை) பிற்பகல் உரையாற்றினார்.
அப்போது மணிப்பூர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக சாட்டினார்.
இந்நிலையில் ராகுல் காந்தி மக்களவையில் பேசியபோது மத்திய அரசின் தொலைக்காட்சியான சன்சத் டிவியில் அவரை முழுமையாக திரையில் காட்டவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
'மக்களவையில் ராகுல் காந்தி இன்று பிற்பகல் 12.09 முதல் 12.46 மணி வரை 37 நிமிடங்கள் பேசினார். ஆனால், சன்சத் டிவி கேமரா, வெறும் 14 நிமிடங்கள் 37 நொடிகள் மட்டுமே அவரை திரையில் காட்டியது. அவர் பேசியதில் இது 40%க்கும் குறைவான நேரம்.
மணிப்பூர் குறித்து 15 நிமிடம் 42 நொடிகள் ராகுல் காந்தி பேசிய நிலையில், அவைத் தலைவர் ஓம் பிர்லா 11 நிமிடங்கள் 8 நொடிகள் திரையில் காட்டப்பட்டுள்ளார். இது 71% நேரம்.
எதைப் பார்த்து பிரதமர் மோடி அரசு பயப்படுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ராகுல் உரையின்போது மக்களவையில் பிரதமர் இல்லை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!

ஐஐஎம் மும்பை-ல் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?

7 மாதங்களுக்கு முன்பு அணியில் இல்லை... அறிமுக உலகக் கோப்பை ஆட்டத்தில் மிரட்டிய ஆஸி. கோல்கீப்பர்!

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



