சந்திரயான் 3: இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!

நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து ரோவர் தனியே நகர்ந்து தனது ஆய்வுப் பணியை தொடங்கியது.
சந்திரயான் 3: இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!
Published on
Updated on
1 min read

நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து ரோவர் தனியே நகர்ந்து தனது ஆய்வுப் பணியை தொடங்கியது.

சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் ஒரு மாத பயணத்துக்குப் பிறகு நேற்று மாலை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

லேண்டரில் இருந்து மெதுவாக தரையிறங்கி, தனியே நகர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை ரோவர் தொடங்கியது. வெற்றிகரமாக ரோவர் பிரிந்த நிலையில் சந்திரயான் 3 திட்டத்தின் அறிவியல் ஆய்வுப் பணிகள்  தொடங்கின.

லேண்டரில் உள்ள அனைத்து அறிவியல் ஆய்வு கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டரில்  ILSA, RAMBHA and ChaSTE  ஆகியவற்றின் செயல்பாடுகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், உந்துவிசைக்கலன் அமைப்பு கடந்த ஞாயிறு முதல் தனித்து செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com