முதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நடுவானில் குழந்தைக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்

விமானத்தில் நடுவானில் மூச்சு நின்றுபோன குழந்தைக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 5 மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2023, 4:01 pm IST

விமானத்தில் நடுவானில் மூச்சு நின்றுபோன குழந்தைக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 5 மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

பெங்களூருவில் இருந்து தில்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த விஸ்தாரா விமானத்தில் வந்த குழந்தைக்கு திடீரென உடல்நலப் பிரச்னை ஏற்பட்டது.

விஸ்தாரா விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு, அவசர சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், அதற்குள், பெங்களூருவில் இருந்து, தில்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் 5 பேர் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்ததால், அவர்கள் குழந்தைக்கு நடுவானில் உயிர் காக்கும் சிகிச்சை அளித்தனர்.

இதய பிரச்னைக்கு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்ட இரண்டு வயது பெண் குழந்தை, விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, ஞாயிற்றுக்கிழமை மாலை மயக்கமுற்று மூச்சுவிடுவது நின்றுபோனது.

அதே விமானத்தில் இருந்த ஐந்து மருத்துவர்களும் குழந்தையின் நாடித்துடிப்பை பரிசோதித்தபோது, மிக மோசமாக இருந்ததால், குழந்தைக்கு சிபிஆர் செய்யப்பட்டு, உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோதே இருந்த குறைவான மருத்துவக் கருவிகளைக் கொண்டு குழந்தையின் உயிர் காக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து குழந்தை வெளியே கொண்டுவரப்பட்டு மருத்துவ நிபுணர்களிடம் சேர்க்கப்பட்டது. 

இந்த தகவலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிரப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.