இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

துபை பயணத்தை முடித்துக்கொண்டு தில்லி வந்தடைந்தார் மோடி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் துபையில்​வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக பருவநிலை பாதுகாப்புத் திட்ட மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு தில்ல

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:50 pm IST

புது தில்லி: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் துபையில்​வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக பருவநிலை பாதுகாப்புத் திட்ட மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு தில்லி வந்தடைந்தார்.

தனது ஐக்கிய அரபு அமீரகத்தின் பயணத்தின் போது, இந்தியா உட்பட உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளுக்கு காலநிலை மாற்றத்தில் பங்கு குறைவாகவே உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.ஆனால் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அவற்றில் மகத்தானது. வளங்கள் பற்றாக்குறை இருந்தபோதிலும், இந்த நாடுகள் காலநிலை நடவடிக்கைகளில் உறுதியாக உள்ளன.‘காப்28’ மாநாட்டின் காலநிலை நிதியை மாற்றுவது குறித்த அமர்வில் பிரதமர் கூறினார்.

‘பருவநிலை பாதுகாப்பு தொடா்பான உலகின் லட்சியங்கள் அதிகரித்துள்ளன. அந்த லட்சியங்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் நிதி ஒதுக்கீட்டில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான், ‘காப்28’ மாநாடு பயனுள்ளதாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் அமையும். 

உலகளாவிய காா்பன் பட்ஜெட்டில், அனைத்து வளா்ந்து வரும் நாடுகளுக்கும் நியாயமான பங்கை வழங்க வேண்டும்.வளா்ந்து வரும் நாடுகள் பருவநிலை மாற்ற சவால்களை திறம்பட எதிா்கொள்ளும் வகையில், தொழில்நுட்பங்களை வளா்ந்த நாடுகள் பகிா்ந்துகொள்வது அவசியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். 

பருவநிலை குறித்த பாரீஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை நோக்கி முன்னேறுவதில் இந்த உச்சி மாநாடு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், சா்வதேச ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் இந்தியா நம்புகிறது என்றாா்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் நடைபெறும் பருவநிலை பாதுகாப்பு நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு(காப்28)துபையில் வியாழக்கிழமை நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை துபையில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.