வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏழு மாதங்களாக வன்முறை தொடர்ந்து கொண்டிருப்பது மன்னிக்க முடியாதது என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மேலும் 13 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 215 நாட்களில் மட்டும் 60,000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமானதாகவும், மனிதத்தன்மை அற்றதாகவும் உள்ளது.
பிரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறும் மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்ததற்கு யார் பொறுப்பு?
மணிப்பூரில் அமைதி, இயல்புநிலை மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்க, மத்திய அரசால் அமைக்கப்பட்ட அமைதிக் குழு ஏன் எந்தப் புலப்படும் வேலையையும் செய்யவில்லை?
காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியது போல பிரதமர் நேரடியாக தலையிட்டு விரிவாக ஆலோசனை நடத்தினால்தான் மணிப்பூரில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தீர்வு கிடைக்கும்.” என்று கார்கே தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


