'இந்தியா' கூட்டணியினர் ஒற்றுமையாக உள்ளதாகவும், இதன் அடுத்த கூட்டம் டிசம்பர் 16 முதல் 18-ஆம் தேதிக்குள் நடைபெறலாம் என்றும் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவசேனை கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த தலைவர் சஞ்சய் ரௌத் கூறியதாவது, “இந்தியா கூட்டணியின் கூட்டம் இன்று (டிச. 6) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில முக்கியமான தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை இருக்கிறது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது மாநிலத்தில் வெள்ள மீட்பு பணிகளில் இருக்கிறார், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாருக்கு உடல்நிலை சரியில்லை, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் வரமுடியாத சூழ்நிலையில் உள்ளார்.
இதையும் படிக்க | அம்பேத்கர் நினைவு தினம்: தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி!
எனவே இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் டிச.16 முதல் 18-ஆம் தேதிக்குள் நடைபெறும். எங்களது கூட்டணிக்கான முகம் மற்றும் பல முக்கிய முடிவுகள் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும். இந்தியா கூட்டணியினர் ஒற்றுமையாக இருக்கிறோம். அதனை 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் காண்பீர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (புதன்கிழமை) இந்தியா கூட்டணியின் கூட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

ஆடிஷன் விடியோக்களை ரசிகர்களுக்காக பகிர்ந்த நடிகை காவ்யா அறிவுமணி!

சூர்யா - 50! இயக்குநர் நெல்சனுடன் பேச்சுவார்த்தை?

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



