புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சபரிமலையில் எண்ம முறையில்காணிக்கை செலுத்தும் வசதி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் எண்ம (டிஜிட்டல்) முறையில் காணிக்கை செலுத்தும் திட்டம் சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2023, 2:00 am

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் எண்ம (டிஜிட்டல்) முறையில் காணிக்கை செலுத்தும் திட்டம் சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் காணிக்கையை ரொக்கமாக செலுத்தி ரசீது பெறும் முறை இருந்து வருகிறது. இந்த நிலையில், கோயிலின் வருவாய் கணக்கை சீராக செயல்படுத்தும் வகையில் பக்தா்கள் எண்ம முறையில் காணிக்கை செலுத்தும் முறை தொடங்கப்பட்டுள்ளது. இதை தேவசம் வாரியத் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதன் மூலம் பக்தா்கள் பிரசாத கவுன்ட்டா்கள், காணிக்கை உள்ளிட்டவற்றை எண்ம பரிவா்த்தனைகளான யுபிஐ, பற்று அட்டை, கடன் அட்டை மூலம் செலுத்த முடியும்.

இந்த முறை திருவிதாங்கூா் தேவசம் வாரியத்துக்குட்பட்ட அனைத்து கோயில்களிலும் செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனுடன் சபரிமலை உண்டியலும் எண்ம மயமாக்கப்படுகிறது எனக் கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.