கரோனா தொற்றால், புதிதாக 656 பேர் பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்ட கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

புது தில்லி: இந்தியாவில் ஒரே நாளில் 656 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. ஒட்டுமொத்தமாக 3,742 பேருக்குக் கரோனா செயல்பாட்டில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காலை 8 மணி தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்துக்குள் கேரளாவில் இறந்த கரோனா நோயாளி ஒருவர் உள்பட இதுவரை நாடு முழுவதும் 5,33,333 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்த பாதிப்பு 4.50 கோடியாக அதிகரித்துள்ளது. நோயிலிருந்து குணமாகும் சதவிகிதம் 98.81 ஆக உள்ளது.

மத்திய அரசின் இணையத்தளத்தின் தகவல்படி 220.67 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com