நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விபரீதமாக மாறிய சச்சரவு: இளைஞர் பலி!

பள்ளி மாணவர்கள் தாக்கியதாகவும் அதனால் தலை மற்றும் நெற்றியில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2023, 12:55 pm IST

புது தில்லி: காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது இளைஞர் சனிக்கிழமை இரவு உயிரிழந்ததாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு தில்லியில் உள்ள பஞ்சன்புரா பகுதியில் டிச.12 அன்று பள்ளி மாணவர்களுக்கும் 17 வயது இளைஞருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பெரியவர்களின் தலையீட்டால் சுமூகமாக பிரச்னை முடிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் டிச. 15 அன்று மாலை 5 மணிக்கு அந்த இளைஞர், பள்ளி மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார். முகத்திலும் நெற்றியிலும் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி நினைவை இழந்துள்ளார்.

சனிக்கிழமை இரவு 10.30-க்கு அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.