முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கைதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்நீட் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிய மறுப்பு: ராகுல் தர்னாஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

ரெளடிகளைச் சமூக வலைதளத்தில் பின்தொடர்ந்தால்... : காவல்துறை

அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் களத்தில் செயல்படவும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும் உள்ளனர்.

கோப்பு

Published On :6 பிப்ரவரி 2024, 7:02 pm IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காவல் துறை, குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக மூன்று நாள் சிறப்பு முகாமை புதன்கிழமை தொடங்கியுள்ளது.

இந்த முகாமின்போது காவல்துறை குழுக்கள், அனைத்து மாவட்டங்களிலும் குற்றவாளிகளைச் சோதனையிடும் பணிகளை மேற்கொள்ளும்.

காவல்துறை செய்தித் தொடர்பாளர் பேசும்போது, ராஜஸ்தான் டிஜிபி உமேஷ் மிஸ்ராவின் வழிகாட்டுதல்படி குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக தீவிரமான முன்னெடுப்பைக் காவல்துறை தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதல் டிஜிபி எம்.என்.தினேஷ் தலைமையில் இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் களத்தில் செயல்படவும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும் உள்ளனர். 

ஆயுதச் சட்டம், கலால் சட்டம், போதை பொருள்கள் மற்றும் உளநிலை கட்டுப்பாட்டு மருந்துகள் (என்டிபிஎஸ்) சட்டம் ஆகியவற்றின்கீழ் தேடப்படும் குற்றவாளிகளுக்கு எதிராக இந்த முகாம் நாள்களில் நடவடிக்கை மேற்கொள்ளவும் இதுகுறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படவும் உள்ளது.

இது தவிர, சமூக வலைதளங்களில் ரெளடிகளைப் பின் தொடர்பவர்கள் மற்றும் கருத்து பின்னூட்டமிடுபவர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.