அதானி விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனவும், மக்களுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் ஈடுபடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான ஆலோசனையில் ஈடுபடாமல் அவரை எதிர்க்கட்சிகள் அவமதித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக தலைமையகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: சன்னி லியோன் பேஷன் நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகே குண்டுவெடிப்பு
பத்திரிகையாளர்களிடம் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் பேசியதாவது: எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரை மீதான நன்றி செலுத்தும் தீர்மானத்தை அவமதித்து வருகின்றன. அதற்காக அவர்கள் குடியரத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். குடியரசுத் தலைவர் உரையின் மீதும், மக்களுக்கான இந்த 2023-24 மத்திய பட்ஜெட் மீதும் எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபடாமல் நழுவி வருகின்றன என்றார்.
அதானி குழுமத்தின் மீது சுதந்திரமான விசாரணை வேண்டும் எனவும், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக அதன் செயல்பாடுகள் முடங்கின. அமளியில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சிகள் அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
இதையும் படிக்க: சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
இந்த சூழலில், அதானி குழுமத்தின் மீது விசாரணை நடத்தக் கோரி எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கிகளின் முன்பு நாளை மறுநாள் (பிப்ரவரி 6) நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்கா

நானியின் பாரடைஸ் திரைப்படத்தில் சிறப்பு நடனமாடும் கீர்த்தி சுரேஷ்?

தொடரும் ரஷியா - உக்ரைன் போர்; டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி !

மாணவர்களின் போராட்டம் மத்திய அரசைப் பணிய வைத்தது! அகிலேஷ் யாதவ்
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2



