சிபிஐ விசாரணைக்கு மணீஷ் சிசோடியா ஆஜர்!

தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று  விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
சிபிஐ விசாரணைக்கு மணீஷ் சிசோடியா ஆஜர்!
Published on
Updated on
1 min read

தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று  விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. 3 மாதங்களுக்கு முன்பாக இது குறித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதமும் சோதனை நடைபெற்ற நிலையில்,  மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியது.

தில்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் மதுபானக் கொள்கை மாற்ற மோசடி வழக்கில் சிபிஐக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

இந்த நிலையில் 2 ஆம் கட்ட விசாரணைக்கு பிப்.19 ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் மணீஷ் சிசோடியா இன்று ஆஜராகியுள்ளார்.

இதனையடுத்து, சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வெளியே ஆம் ஆத்மி தலைவர்களின் போராட்டம் நடத்தவுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com