எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

இருவரின் கொள்கைகளும் ஒத்துப்போகவில்லை.. புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல்

புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ராகுல், இருவரின் கொள்கைகளும் ஒத்துப்போகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

News image

இருவரின் கொள்கைகளும் ஒத்துப்போகவில்லை.. புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல்

Updated On :2 பிப்ரவரி 2024, 12:14 am IST


பாஜக எம்.பி. வருண் காந்தி, ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக வந்த புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ராகுல், இருவரின் கொள்கைகளும் ஒத்துப்போகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஹோஷிப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் சில விஷயங்களை வருண் காந்தி ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால், அந்த கருத்துகளுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை.

என்னால் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு செல்லவே முடியாது, அவ்வாறு நான் செய்வதாக இருந்தால், அதற்கு முன் நீங்கள் என் தலையை துண்டித்துவிட வேண்டும். எனது குடும்பத்துக்கு என்று ஒரு கொள்கை உள்ளது, அதற்கென ஒரு சிந்தனை முறை உள்ளது என்றும் தெரிவித்தார்.

என்னால் நிச்சயமாக அவரை சந்திக்க முடியும், அரவணைக்க முடியும். ஆனால் ஒருவோதும் அந்த சித்தாத்தங்களோடு ஒத்துப்போக முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் ராகுல்.

நடைப்பயணத்தின் போது பாதுகாப்புக் குறைபாடு நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ள ராகுல், நடைப்பயணத்தில் இணைந்த அனைவரும் பாதுகாப்பை உறுதிசெய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். கட்டிப்பிடிக்க வந்தவர், என்னைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். அவ்வளவுதான் என்று ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.

இன்று காலை ஒற்றுமை நடைப்பயணத்தின் போது ராகுல் காந்தியிடம் வந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர், திடீரென அவரை கட்டிப்பிடிக்க முயன்றதால், அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை விலக்கி வெளியேற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.