ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச குடும்பத்தில் வேலை பார்ப்பவர் என பொய் கூறி தில்லியில் ஐந்து நட்சத்திர உணவகத்தில் தங்கிய நபர் 4 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐந்து நட்சத்திர உணவகத்தில் 4 மாதங்கள் தங்கியது மட்டுமில்லாமல் உணவகத்தில் உள்ள விலை உயர்ந்த பொருட்களையும் எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மீண்டும் நகைச்சுவை நடிகராகும் சந்தானம்!
இந்த சம்பவம் தில்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற ஐந்து நட்சத்திர உணவகத்தில் நடைபெற்றுள்ளது. முகமது செரீஃப் என்ற நபர் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி உணவகத்துக்கு வந்துள்ளார். தன்னை ஐக்கிய அரபு அமீரக அரச குடும்பத்தில் பணிபுரிபவர் என அடையாளப்படுத்திக் கொண்ட அவர் உணவ தங்கும் விடுதியில் அறை எண் 427-ல் தங்கியுள்ளார். நான்கு மாதங்களுக்கு அந்த அறையில் தங்கியிருந்த அவர் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி சொல்லிக் கொள்ளாமல் அறையினை காலி செய்து புறப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர் தங்கிய அறைக்கான வாடகைத் தொகை ரூ.23.46 லட்சத்தினை தரமால் ஏமாற்றிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் தங்கியிருந்த அறையில் இருந்த வெள்ளிப் பொருட்களையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முகமது செரீஃப் தன்னை ஐக்கிய அரபு அமீரக அரச குடும்பத்தில் பணிபுரிவர் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பொய்யான அறிமுக அட்டையினையும் அவர் அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக அரச குடும்பத்தின் முகவரி உடைய பொய்யான விலாச அட்டையை கொடுத்துள்ளார். செரீஃப் வேண்டுமென்ற தன்மீது நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக அரச குடும்பத்தில் பணிபுரிவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.