திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மக்கள் பயன்பெறும் வகையில் 400 புதிய மருத்துவமனைகளை திறந்து வைத்த அரவிந்த் கேஜரிவால்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 400 புதிய சிறிய ஆம் ஆத்மி மருத்துவமனைகளை பஞ்சாப் மக்களுக்காக திறந்து வைத்தனர். 

News image
Updated On :27 ஜனவரி 2023, 10:36 am

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 400 புதிய சிறிய ஆம் ஆத்மி மருத்துவமனைகளை பஞ்சாப் மக்களுக்காக திறந்து வைத்தனர். 

இந்த புதிய சிறிய மருத்துவமனைகள் திறக்கப்பட்டதன் மூலமாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிறிய ஆம் ஆத்மி மருத்துவமனைகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது: பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு 10 மாதங்களில் 500 மோகல்லா மருத்துவமனைகளை திறந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த 500 மருத்துவமனைகள் போன்று மக்களுக்கு இன்னும் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட உள்ளன என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மருத்துவத் துறை அமைச்சர் பல்பீர் சிங் மற்றும் ஆம் ஆத்மியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.