கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

திரிபுரா: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.  

News image

கோப்புப்படம்

Updated On :28 ஜனவரி 2023, 9:44 pm IST

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. 

திரிபுராவில் 60 தொகுதிகளுக்கான 13-ஆவது சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும் என்று அண்மையில் தோ்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை மாா்ச் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜனவரி 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில், அவற்றின் மீதான பரிசீலனை ஜனவரி 31-ஆம் தேதி நடைபெறுகிறது. 

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற பிப்ரவரி 2-ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.  தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. இடதுசாரி முன்னணி 47 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்து 13 இடங்களை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது.

இந்த நிலையில் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. காங்கிரஸ் 4 தொதிகளுக்கு கூடுதலாக வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், அந்த இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே நட்புரீதியான போட்டி ஏற்படும் சூழல் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.