முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

பலாத்காரத்துக்கு உள்ளான குழந்தையின் கல்விக்கு உதவ முன்வந்த காவல்துறை

பள்ளி வளாகத்திலேயே பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான 5 வயது குழந்தையின் கல்விக்கு உதவ மும்பை காவல்துறையினர் முன் வந்துள்ளனர்.

News image

பலாத்காரத்துக்கு உள்ளான குழந்தையின் கல்விக்கு உதவ முன்வந்த காவல்துறை

Updated On :28 ஜனவரி 2023, 6:09 pm IST


மும்பை: பள்ளி வளாகத்திலேயே பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான 5 வயது குழந்தையின் கல்விக்கு உதவ மும்பை காவல்துறையினர் முன் வந்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, 15 வயது சிறுவனால் 5 வயது குழந்தை பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், குழந்தை மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதை அறிந்த காவல்துறையினர், நிதி திரட்டி ரூ.1.11 லட்சத்தை வங்கியில் செலுத்தியிருக்கிறார்கள். இந்தப் பணத்தைக் கொண்டு அந்தக் குழந்தை 10ஆம் வகுப்பு வரை எந்த சிக்கலும் இல்லாமல் கல்வி கற்க உதவும் என்றும், குழந்தையை நல்ல பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.