தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக ஆளுநர் ஆன்.என்.ரவி இன்று சந்தித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதினார்.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்குரைஞரிடம் ஆலோசனை நடத்துமாறு ஆளுநருக்கு அறிவுரை வழங்கியது. இதையடுத்து தனது கடிதத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வருக்கு ஆளுநர் மீண்டும் கடிதம் எழுதினார்.
இந்த பரபரப்பான சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை தில்லிக்குச் சென்றடைந்தார். அவர் ஒரு வாரம் தில்லியில் தங்கி ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று தில்லியில் சந்தித்துள்ளார். தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சூழல் மற்றும் பொது சிவில் சட்டம் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.