மேற்கு வங்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நம்பிக்கையில்லை என பாஜக தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 8ஆம் தேதி கிராம உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 73,887 இடங்களுக்கான தேர்தலில் 2.06 லட்சம் வேட்பாளா்கள் போட்டியிட்டனர்.
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது கலவரம் ஏற்பட்டதால், பதற்றமான சூழல் நிலவியது. தேர்தலையொட்டி நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 12 போ் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நம்பிக்கையில்லை என பாகஜ மாநில பொதுச்செயலாளர் அக்னிமித்ரா பால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, நடந்து முடிந்த கிராம உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு (பாஜக) நம்பிக்கையில்லை. தேர்தலின்போது எங்கும் வன்முறை நிலவியது. மம்தா அரசின் அதிகாரிகள் கட்டாயத்தின்பேரில் வாக்குப்பதிவை நிறைவு செய்தனர். மத்திய அரசுப் படைகளை மாநில அரசு உள்ளே வர விடவில்லை. பல்வேறு வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா இல்லை. பல மையங்களில் ஒற்றை இலக்க வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியடைந்துள்ளது. மேற்கு வங்க மக்கள் திரிணமூல் காங்கிரஸை தூக்கி எரிய சாலைக்கு வந்துவிட்டனர். அதில்தான் எங்கள் வெற்றி பதிவாகியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் 6 நாள்களுக்கு கனமழை தொடரும்!
தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு!
ஜன நாயகனில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்?
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


